டாடா மோட்டார்ஸ் ஆனது இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவங்களின் ஒன்று. இந்நிறுவனம் கமர்ஷியல் மற்றும் பெஸ்சேன்ஜ்ர் வாகன தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது. உலக அளவில் ட்ரக் தயாரிப்பில் இரண்டாவது இடத்தயும் பஸ் தயாரிப்பில் நான்காவது இடத்திலும் உள்ளது. இந்நிறுவனம் Jaguar மற்றும் Land rover ஆகிய இங்கிலாந்து நிறுவனத்தினை வாங்கி அதன் (JLR) மூலம் உலக சந்தையில் தனது வாகனங்களை சந்தை படுத்தி வருகிறது.
டாடா மோட்டார்ஸ் பங்குகள் வர்த்தகத்தின் இரண்டாவது பகுதியில் வீழ்ச்சி :
டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் இன்று காலை முதலே நல்ல ஏற்றமடைந்து Rs 358.2 வரை தொட்டது. வர்த்தகத்தின் பிற்பகுதியில் 10 % சரிந்து Rs 311.50 வர்த்தகமானது. பின்பு சற்று உயர்ந்து Rs 316.90 இல் முடிவடைந்தது.
டாடா மோட்டார் நிறுவன பங்குகள் வீழ்ச்சியடைய JLR நிறுவனத்தில் நிலவும் (semi conductor)சிப் பற்றாக்குறையே காரணமாக கூறப்படுகிறது. சிப் பற்றாக்குறையின் காரணமாக JLR நிறுவனத்தின் விற்பனை வரும் செப்டம்பர் 2021 இல் 50 % வரை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக டாடா மோட்டார்ஸ் BSE இல் அறிவித்துள்ளது.
இந்த சிப் பற்றாக்குறை இந்த ஆண்டு முழுவதும் நீடிக்கும் எனவும். இதை தவிர்க்க JLR நிறுவனம் பல முயர்ச்சைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது. சிப் சப்ளையர்கள் தயாரிப்பில் அதிக முதலீடு செய்து பற்றாக்குறையை முழுவதும் தீர்க்க 12 - 18 மாதங்கள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளது. ஆகவே செப்டம்பர் 2021 இல் முடிவடையும் காலாண்டில் டாடா மோட்டார்சின் EBIT வீழ்ச்சியடையம் என எதிர்பார்க்கபடுகிறது. இதுவே 10 % வரை வீழ்ச்சியடைய காரணமாக கருதப்படுகிறது. JLR நிறுவனத்தில் ஜூன் 30 உடன் முடிவடைந்த முதல் காலாண்டில் கடந்த வருடத்தை காட்டிலும் 68 .1 % விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற ஷேர் மார்க்கெட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் தொடர்பான செய்திகளை தமிழில் உடனுக்குடன் அறிந்து கொள்ள Getprofit இணையதளத்தை Google News இல் பின்தொடரவும். Subscribe
0 கருத்துகள்